
தமிழர்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்துள்ளார் கனேடிய நாட்டைச் சேர்ந்த வில்லியம் பாற்றர்சன். நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை சபையின் பொது விவாதத்தில் பங்கெடுத்து, தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே அவர் இவ்வாறு குரல் கொடுத்துள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தமிழரின் ஆவணங்களையும் ஈழம் மற்றும் தமிழீழம் போன்ற சொற்களை தடை செய்ததை கண்டித்தும் அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.