பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையில் நிலவி வரும் மோதலான நிலைமையினால் ஆறு வருடங்களாக தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான நாடுகளின் (சார்க்) மாநாட்டை நடத்த முடியாமல் போயுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இறுதியாக சார்க் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -

பிராந்திய நாடுகளில் ஒரு நாட்டின் எதிர்ப்பு காரணமாகவே சார்க் மாநாட்டை நடத்த முடியவில்லை எனவும் அந்த நாடு இந்தியா எனவும் தினேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.