வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று மதியம் கவனயீர்ப்பு பேgரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
- Advertisement -
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்கள்,
- Advertisement -
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்து வருடங்களை எட்டுகின்றது. இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர். எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.