கண்டியில் போலி வைத்தியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வைத்தியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து 47 வயதுடைய போலி பெண் வைத்தியர் ஒருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (22) கைது செய்யப்பட்டார். தனது பெயரில் போலி மருத்துவ பதிவு சான்றிதழைத் தயாரித்து கிளினிக் ஒன்றை திறந்து மருத்துவராக கடமையாற்றி வருவதாக குறித்த பெண் வைத்தியர் முறைப்பாடளித்துள்ளார்.
- Advertisement -

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.