எல்லா கொரோனா வகைகளை காட்டிலும் மிக மோசமான கொரோனா குறித்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது. இது 70% அதிக வேகமுள்ள வைரஸ். இதுபோக, தென்னாபிரிக்கா, ஆர்ஜன்ரீனா உள்ளிட்ட நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவத் தொடங்கின.
- Advertisement -

ஏற்கெனவே உருமாறிய வைரஸ்களை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், பிரிட்டனில் கெண்ட் பகுதியில் மற்றுமொரு உருமாறிய கொரோனா வைரஸ் அண்மையில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் உலகத்தையே கூட அழித்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பல்வேறு உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவி வந்தாலும், பிரிட்டனில் முதல்முறையாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவே மிக மிக ஆபத்தானது என்று பிரிட்டிஷ் அரசு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
பிரிட்டனில் உருமாறிய கொரோனா மக்களிடையே வேகமாக பரவுவதில் மட்டுமல்லாமல், உயிரை கொல்லுவதிலும் சக்திவாய்ந்ததாக இருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பிரிட்டிஷ் அரசின் பொது சுகாதார ஆய்வாளர் நீல் ஃபெர்குசன், “நோயால் பாதிக்கப்படுவதிலும், உயிரிழப்பதிலும் இந்த வைரஸால் ஆபத்து 40% முதல் 60% அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.