நாட்டில் பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று நள்ளிரவு (06-06-2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.