யாழ் தாவடிப் பகுதியில் கே.கே.எஸ் வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகனம் சுத்திகரித்த கழிவு நீரினை கொணடு வந்து வீட்டு வளவினுள் ஊற்றி பெரும் அட்டகாசம் செய்து வருகின்றார் அப்பகுதி குடும்பஸ்தர்.
- Advertisement -
இதனால் குறித்த பகுதிகளில் உள்ள கிணற்று நீர் மாசடைந்து போகும் அபாயம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளதுடன் குறித்த பகுதி சுகாதார உத்தியோகத்தர் மற்றும் கிராமசேவகரிடத்திலும் முறையிட்டுள்ளார்கள்.
- Advertisement -
குறித்த குடும்பஸ்தரும் மனைவியும் பிரிந்து வாழ்வதாகவும் அதனால் அவர்கள் கட்டிய வீடு யாருக்குச் சொந்தம் என்று எழுந்த சண்டை காரணமாக குறித்த வீடு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந் நிலையிலேயே குடும்பஸ்தர் அருகே இருக்கும் வாகன சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு நீரை அந்த வீட்டு வளவுக்குள் ஊற்றுகின்றார். அத்துடன் குறித்த வீட்டு வாசலில் வயதானவர்கள் அணியும் பம்பஸ் மற்றும் குப்பை கூழங்களையும் போட்டு அப்பகுதியை பெரும் சீர்கேட்டுக்கு உள்ளாக்கி வருவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக அயலவர்கள் குறித்த குடும்பஸ்தருக்கு அவ்வாறு செய்ய வேண்டாம் என கூற முற்படும் போது அவர் அவர்களை தாக்க முற்படுவதாகவும் தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் அயலவர்கள் கூறுகின்றார்கள். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளார்கள்.