மிஹிந்தலை, தொரமடலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று மாற்றுத்திறனாளியாக பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
எச்.எம்.ஸ்ரீயானி விஜேசிங்க என்ற 49 வயதான திருமணமாகாத பெண்ணே கொல்லப்பட்டார்
கொலைசெய்யப்பட்ட பெண்ணும் அவரது 79 வயதுடைய தாயும் இந்த வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், வயோதிப தாய் தனது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
அவரது தாயார் வீட்டிற்கு வந்தபோது, மகள் இருந்த அறையில் ஆண் ஒருவர் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது அந்த ஆண், தாயாரை அச்சுறுத்தியுள்ளார். தாயார் உதவிகோரி சத்தமிட்டதை தொடர்ந்து, அங்கு அயலவர்கள் திரண்டு அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
படுக்கையறையில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் நிர்வாணமாக காணப்பட்டது.
47 வயதுடைய கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இராணுவத்தில் பணியாற்றியவர்.
மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.