லண்டனிலிருந்து தங்கை அனுப்பிய 30 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டு தங்கையை ஏமாற்றியுள்ளார் முல்லைத்தீவை மல்லாவியைச் சேர்ந்த அருள்விமலன் என்ற 42 வயது குடும்பஸ்தர்.
- Advertisement -
இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் வட்டி வீதம் கூடுதலாக உள்ளதாக லண்டனில் உள்ள தங்கையிடம் கூறியுள்ளார் அருள்விமலன். இதனையடுத்து தங்கை இது தொடர்பாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தனது தாயின் பெயரில் வங்கிக் கணக்கு திறந்து அவரது கணக்கில் வைப்பிலிடுமாறு தங்கை 30 லட்சம் ரூபாவை முதலில் தனது அண்ணனுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அருள்விமலன் அந்தப் பணத்தை தாயின் பெயரில் வைப்பிலிடாது தனது பெயரில் வைப்பிலிட்டதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னரும் தங்கை தனது அண்ணனுக்கு என 20 வருடங்களின் பின் ஒரு கோடி ரூபா வரக்கூடியதான வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக 7 லட்சம் ரூபா பணத்தை அனுப்பியுள்ளார்.
இந் நிலையில் அருள்விமலனின் மகள் இளைஞன் ஒருவரை காதலித்து தொடர்பான சர்ச்சையின் போது அருள்விமலனால் தாக்கப்பட்ட காதலன் பொலிசாரிடம் முறையிட்டதால் விசாரணைகள் நடைபெறுகின்றன.
இச் சம்பவத்தை அடுத்து அருள்விமலனின் மகள் தனது லண்டன் அத்தையிடம் பணம் தந்தையின் பெயரில் வைப்பிலிட்ட தகவலை கூறியுள்ளார். லண்டன் தங்கை தாயாரிடம் இது தொடர்பாக விசாரித்த போது தன்னை வங்கிக்கு கொண்டு சென்று காசு போட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார் தாயார். ஆனால் அந்த வங்கி உறுதிச் சீட்டில் தாயாரின் பெயரில் வெறும் ஒரு லட்சமே போடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தனது அண்ணனிடம் தங்கை விசாரணை செய்த போது தங்கையை கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளார் அருள்விமலன். அத்துடன் தனது பாதுகாப்பில் இருக்கும் 75 வயதான நோயாளியான தாயாரையும் வீட்டை விட்டு துரத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அத்துடன் பணம் தொடர்பாக தனது தங்கைக்கு போட்டுக் கொடுத்த மகளையும் கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. இத் தாக்குதல் மற்றும் பண முறைகேடுகள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது