இராணுவ வீரரின் மனைவியுடன் இரகசியமாக பேசிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தனது மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு தப்பியோடியுள்ளார். அநுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
- Advertisement -
பொலிஸ் அதிகாரியின் உதவிக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இராணுவ சிப்பாயினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
குறித்த பெண்ணுக்கு பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு இருப்பது இராணுவ வீரரின் கணவருக்கு தெரியவந்ததையடுத்து, அவரை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
கடமை நிமித்தம் கொழும்பு சென்ற இராணுவ வீரர், இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிய போது, மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
தனது நண்பியுடன் வைத்தியசாலைக்கு சென்றதாகவும், விரைவில் வந்து விடுவதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
கணவன் இரகசியமாக வைத்தியசாலை பகுதிக்கு வந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்களுடன், மனைவியும், நண்பியும் உரையாடிக் கொண்டிருந்துள்ளனர். அங்கு சென்ற இராணுவ சிப்பாய் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தலைமை பொலிஸ் அதிகாரி தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளார். மற்றைய பொலிஸ்காரர் காயமடைந்துள்ளார்.
பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.