இலங்கை வரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சால் புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறை மற்றும் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் ஊடாக நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.