கடமைக்கு செல்வதற்காக எரிபொருள் பெற்றுள்ள அரச ஊழியர்கள் இன்று கடமைக்கு கட்டாயம் செல்லவேண்டும் என வடமாகாண ஆளுநர ஜீவன் தியாரகராஜ கூறியுள்ளார்.
- Advertisement -
இ.போ.ச பேரூந்துகள் சாரதி, காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை புதிய தரப்பினர் தமக்கு பற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
- Advertisement -
அத்துடன் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.