யாழ் நவாலி பிரதேசத்தில் உள்ள “பிரசாத் சந்தையில்” மாட்டிறைச்சி கழிவுகள் முறையற்ற விதத்தில் அகற்றப்படாது, சந்தையின் உள் பிரதேசத்திலும், சந்தையை அண்மித்த தெருவோரங்களிலும் வீசி காணப்படுவதாக ஊர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
மாட்டின் தலையோடு முதல், முள்ளந்தண்டு போன்ற கழிவுகள் ஆங்காங்கே வீசி காணப்படுவதால், நாய் காகம் போன்ற ஏனைய பிராணிகள் அக்கழிவுகளை
சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளின் கிணற்றுக்குள் கொண்டு சென்று போடுவதாகவும் ஊர் மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
- Advertisement -
அதுமட்டுமன்றி மாட்டின் கழிவு இரத்தத்தை கிணற்றுக்குள் ஊற்றி நீரை அசுத்தம் செய்வதாகவும் கூறப்படுகின்றது.
இம்மோசமான செயலுக்கு எதிராக கிராம அலுவலர்கள் போன்ற அரச உத்தியோகத்தர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பது ஊர் மக்களின் கருத்தாகும்.