முல்லைத்தீவு கடலில் காணாமல் போன 2வது நபரின் சடலம் சற்று முன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- Advertisement -
முல்லைத்தீவு கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் அடித்து செல்லப்பட்டு வவுனியாவைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருந்தனர்.
- Advertisement -
இந்த நிலையில் அவர்களில் 2வது நபரின் சடலம் முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கரையொதுங்கிய நிலையில்மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் மதவுவைத்தகுளம் வவுனியாவைச் சேர்ந்த தனுஜன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
நேற்று மாலை வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் சிக்கி விஜயகுமாரன் தர்சன் (தோனிக்கல் வவுனியா) சிவலிங்கம் சமிலன் (மதவுவைத்தகுளம் வவுனியா) மற்றும் மனோகரன் தனுஷன் (மதவுவைத்தகுளம் வவுனியா) ஆகியோர் காணமல் போயிருந்தனர்.