மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வீதியோரங்களில் விற்பனை செய்யப்படும் தரச்சான்றிதழ் அற்ற தரமற்ற முகக்கவசங்கள் தொடர்பில் மக்களுக்கு அரசாங்கம் விழிப்புணர்வு
எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Advertisement -
விசேட விலைக்கழிவுடன் மிகவும் மலிவான விலையில் நூதனமாக வியாபாரத்தில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அணியப்படும் முகக்கவசத்துக்கு தரச்சான்றிதழ் கட்டாயம் எனவும் குறித்த அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.