மெதிரிகிரிய பகுதியில், பழுதடைந்த பாரவூர்தியொன்றின் அடிப்பகுதியில் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில், குறித்த பாரவூர்தி சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
உயிரிழந்த நபர் மெதிரிகிரிய, திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.
- Advertisement -
திருகோணமலையிலிருந்து பொலனறுவை நோக்கி 600 சீமெந்து மூடைகளுடன் பயணித்த மேற்படி பாரவூர்தியின் சில்லு ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாகன திருத்துநரான இந் நபருக்கு, தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிக்கப்பட்டு, அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
பின்னர், வாகனத்தை உயர்த்தும் உபகரணத்தின் (ஜெக்) மூலம் பாரவூர்தியை உயர்த்திவைத்து, பழுதடைந்த சில்லை அகற்றி திருத்தும் பணிகளை முன்னெடுக்க முற்பட்டபோது, 30 டன் நிறையுடைய குறித்த பாரவூர்தி, வாகன திருத்துநரின் உடல் மீது விழுந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் வாகன திருத்துநர், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.