இந்தியா – தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
குறித்த சிறுமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
- Advertisement -
இந்நிலையில், நள்ளிரவு மீண்டும் திடீரென காய்ச்சல் அதிகமான நிலையில் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.