இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை எனவும் , மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது