எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் பொது உதவித் திட்டங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
- Advertisement -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
எனினும் எதிர்வரும் ஜூலை மாதம் 01 திகதி தொடக்கம் சமூக நலப் பலன்கள் கொடுப்பனவுத் திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் இதன் மூலம் 20 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் எனவும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தொடக்கம் சமுர்த்தி உள்ளிட்ட பொது உதவிகள் நிறுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமுர்த்தி வங்கி இதுவரை செலுத்திய நிதியுதவிகள், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியினால் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது