களுத்துறையில் ஐந்து மாடி கொண்ட விடுதியில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவிக்கு, கடைசியாக தொலைபேசி அழைப்பு மற்றும் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றது, அவரது தோழியே என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
- Advertisement -
இந்த தொலைபேசி அழைப்பைப் பெற்றவுடன், மாணவி கோபமடைந்து பயத்துடன் விடுதியின் மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
19 வயதுடைய இந்த யுவதி தற்போது சிறைச்சாலையில் உள்ளதாகவும், அவர் பல்வேறு ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விஹாரா என்ற 16 வயது சிறுமியை 19 வயது சிறுமி தனது காதலனுடன் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அத்துடன் 19 வயதுடைய தோழியும் அவரது காதலன் இருவரும் சிறுமியை 29 வயதுடைய பிரதான சந்தேக நபரிடம் ஒப்படைத்துவிட்டு விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சிறையில் உள்ள 19 வயது சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமிக்கும் அவரது 19 வயது நண்பருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.
எனினும் இந்த அழைப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் பெறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்