யாழ்ப்பாண மாவட்டம் – பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை நேற்று முன்தினம் இரவு (01-05-2023) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தில் விதுஜன் கிஷான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
- Advertisement -
குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வேளியேறிய நிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -
மேலும், குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன என கண்டுபிடிக்கப்படாத நிலையில், குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைககளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்தார்