யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரியுடன் அமைச்சர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
- Advertisement -
இதன் காரணமாக யாழ் பிரதான வீதிகளில் ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது