முச்சக்கர வண்டியில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட நால்வரை மீகஹத்தன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
மீகஹத்தன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிஹினிய பிரதேசத்தில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொல்கம்பளை, மீகஹதன்ன பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் கொழும்பு 3 தெஹிவளை மற்றும் கிருலப்பனையைச் சேர்ந்த மூவரும் வத்தளையைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மீகஹதன்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கடத்தப்பட்ட நபரின் தாயார் வத்தளை, எந்தரமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு ஏமாற்றியமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது