நெடுந்தீவில் 5 முதியவர்களை நகைகளுக்காக கொடூரமாக கொன்ற கொலைகாரன் ரகுவுடன் போராடி ரகுவால் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு காயமாகக் கிடந்த நாயும் நேற்று மாலை பலியாகியதாகத் தெரியவருகின்றது. காயப்பட்ட நாய்க்கு எவரும் சிகிச்சை செய்ய முன்வராது வீட்டில் கிடந்தே நாய் உயிரிழந்துள்ளது.
- Advertisement -
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களினால் தாக்கி ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
- Advertisement -
சம்பவத்தில் 3 பெண்களும் இரு ஆண்களுமே கொலை செய்யப்பட்ட நிலையில் 100 வயது மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிற்சையில் உள்ளார்.
ஈவிரக்கமற்ற நபரின் இந்த கொடூர கொலை சம்பவத்தில் வீட்டினரின் நாயும் காயமடைந்திருந்தது. இந்த நிலையில் குறித்த நாய் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பில் 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.