யாழ்ப்பாணத்தில் குளிர்பான போத்தல்களில் காலாவதியாகும் திகதியில் மாற்றம் செய்தும் திகதி அழிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 710 குளிபானங்கள் யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்திற்கான சோடா விநியோகஸ்தர், காலாவதியான சோடாக்களின் திகதிகளை மாற்றம் செய்தும்,
- Advertisement -
காலாவதி திகதியை அழித்தும் கடைகளுக்கு சோடாக்களை விநியோகம் செய்து வருவதாக யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து,
யாழ் நகர் பகுதியில் உள்ள குறித்த சோடா களஞ்சிய சாலையில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. களஞ்சியசாலையில் இருந்து காலாவதி திகதி மாற்றப்பட்ட ஆயிரத்து 110 சோடாக்களும், காலாவதி திகதி அழிக்கப்பட்ட 600 சோடாக்களும் மீட்ப்பட்டன.
அதனை அடுத்து சோடா போத்தல்களை சான்று பொருட்களாக கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர், விநியோகஸ்தருக்கு எதிராக யாழ். மேலதிக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்