பேஸ்புக்குக்கு அடிமையான சகோதரனின் அலட்சியத்தால், 15 வயதான சிறுமியொருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- Advertisement -
வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்தின் காரணம் வெளிப்பட்டது.
- Advertisement -
சிறுமியின் தாயார் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது மூத்த மகனிற்கு பேஸ்புக் மூலம் நண்பர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒருமுறை கஹட்டகஸ்திகிலிய நண்பரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இரண்டாவது முறையாகவும் அந்த வீட்டிற்கு வந்து, இரவு தங்கியுள்ளார். அன்றைய தினம் தாயார் இரவுப் பணிக்காக சென்றுவிட, பிள்ளைகள் இருவரும், பேஸ்புக் நண்பரும் வீட்டில் இருந்தனர்.
சிறுமியின் சகோதரன் இரவு வேளையில் கையடக்க தொலைபேசியில் பேஸ்புக்கில் மூழ்கியிருந்துள்ளார். இந்த சமயத்தில் பேஸ்புக் நண்பன், வீட்டு அறைக்குள் சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த வீட்டிலிருந்து தப்பிச்சென்று விட்டார்.
சிறுமி குழந்தை பிரசவித்ததை தொடர்ந்து, பொலிசார் பேஸ்புக் நண்பனை அடையாளம் கண்டுள்ளனர். அவர் காலி பகுதியை சேர்ந்தவர்.