பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதகர் ஒருவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதகர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான போதகர், 15 வயதான மாணவி ஒருவரிடம் பல சந்தர்ப்பங்களில் நிர்வாணமாக வட்ஸ்அப் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது