ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
கடந்த 30 ஆம் திகதி பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 49 வயதுடைய இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
யாழ்ப்பாண பகுதி ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது வீட்டினருகே விட்டுச் சென்ற துவிச்சக்கரவண்டியை வைத்து விசாரணை செய்த யாழ்.பொலிசார் கொலைச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்திருந்தனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றமற்றோர் என நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.