அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
திருக்கோவில் தம்பட்டையைச் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில் நள்ளிரவு (29 ) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
- Advertisement -
வடிவேல் பரமசிங்கம், சமூகங்களுக்கிடையிலான இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவர், நல்லுள்ளம் கொண்டவர் ஒரு நண்பனாய், உடன் பிறவா சகோதரனாய், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் அமைப்புக்களில் சமூக பற்றுள்ள மக்கள் தொண்டனாய் செயற்பட்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு , மென் சுபாவம் நிறைந்த சிறந்த பண்பாளர், சமூகசிந்தனாவாதி. அமைதியாக அனைவருக்கும் மதிப்பளித்து பேசுபகின்ற நல்ல சுபாவம் கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது உயிரிழப்பு இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.