கணவன் – மனைவி இடையில் நடந்த தகராறு தொடர்பாக விசாரிக்க சென்றிருந்த பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
- Advertisement -
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக செய்யப்பட்டமுறைப்பாட்டை விசாரணை செய்யச்சென்ற பொலிஸார் மீதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
தாக்குதலை நடாத்தியவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினர் சிவகீர்த்தி எனத் தெரியவருகிறது. இவரிடமிருந்து கிரனைட் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது அவர் மது போதையிலிருந்ததாக தெரிய வருகிறது. படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன் சுபசிங்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான புஸ்பகுமார ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.