யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் இரத்தத்தில் வெண்குருதிசிறுதுணிக்கை அதிகரிப்பால் ஓரிரு நாட்களுக்கு முன் மரணமடைந்தான். குறித்த சிறுவனின் தந்தை சங்கானைப் பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ஊழியராவார். இவர் சில வருடங்களுக்கு முன் கிறீஸ்தவ சபை ஒன்றிற்கு மதம் மாறினார்.
- Advertisement -
வங்கி ஊழியரின் தந்தை அந்தப் பிரதேசத்தில் உள்ள காளி கோயில் தர்மகர்த்தா சபையின் முக்கியஸ்தராக இருந்தவர். வங்கி ஊழியர் மதம் மாறினாலும் ஊழியரின் மனைவி மற்றும் ஊழியரின் தாய் தந்தை மதம் மாறவில்லை. இவர் ஏன் மதம் மாறினார் என்றும் அறிய முடியவில்லை.
- Advertisement -
இந் நிலையில் ஊழியரின் 5 வயது மகன் நோய்வாய்பட்ட நிலையில் சிறுவனை வைத்தியசாலைக்கு அனுமதிக்காது வீ்ட்டிலேயே சிறுவனை வைத்து ஜெபம் செய்து வந்துள்ளார் குறித்த வங்கி ஊழியர். இருப்பினும் சிறுவனின் தாயாரின் கடும் அழுத்தம் காரணமாக சிறுவன் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவனுக்கு இரத்த புற்றுநோய் என கண்டறியப்பட்டு அவனை மகரகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வைத்தியர் அறிவுறுத்தினர். இரத்தம் அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலையில் தனது மதக் கோட்பாட்டில் இரத்தம் மாற்றம் செய்யப்படாது என வங்கி ஊழியர் விடாப்பிடியாக நின்று தனது மகனை மகரகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது மீண்டும் வீட்டிலேயே ஜெபம் செய்ய தொடங்கினார்.
சிறிது நாட்களிலேயே சிறுவனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கடும் காய்ச்சல் ஏற்பட மீண்டும் போதனா வைத்தியசாலைக்கு தாயார் கொண்டு சென்ற போது அங்கு சிறுவன் மரணமடைந்தான்.
சிறுனை கொழும்பு மகரகம வைத்தியசாலைக்கு வங்கி ஊழியரான தந்தை கொண்டு செல்லவில்லை என அறிந்து கடுப்பான யாழ் போதனாவைத்தியசாலை மருத்துவர்கள் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டதாக தெரியவருகின்றது. வங்கி ஊழியரை பொலிசார் கைது செய்தனர். இந் நிலையில் குறித்த கிறீஸ்தவசபையின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் அழுத்தம் காரணமாக வங்கி ஊழியர் பொலிசாரின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதே போலவே யாழில் பிரபல மிக்சர் தயாரிப்பாளரான அல்பா மிக்சர் கொம்பனி முதலாளியும் குறித்த சபையைச் சேர்ந்தவர். விபத்து ஒன்றில் கால்களில் காயம் ஏற்பட்டது. அதற்கு வைத்தியசாலை சென்று சிகிச்சை பெறாத காரணத்தால் கால்களில் ஏற்பட்ட புண்ணில் இருந்து புழுக்கள் வந்து ஏற்பு வலி ஏற்பட்டு மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் சிலைகளுக்கு இந்து மத அடையாளங்களை பேணுவதற்கும் இந்துச் சிலைகளை நிர்மானிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு இருக்கும் ஆர்வம் இவ்வாறான மதமாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்துவதில் இல்லை என்பது வெளிப்படை உண்மை.