யாழ்ப்பாணம் கரவெட்டி – காட்டுப்புலம் பகுதியில் இளம் அரச உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கிராம சேவையாளர் ஒருவரின் புதல்வியே இவ்வாறு உயிரிழந்ததாக யாழ் செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
- Advertisement -
யாழ்ப்பாணம் கைதடி வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சூரியகுமார் வாசுகி (வயது-31) என்ற குறித்த இளம் அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்