உதவிக்கரங்கள் என்னும் வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாக லண்டனில் உள்ள குடும்பஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டு தன்னை அழகுக் கலை செய்யும் பெண் என அறிமுகப்படுத்தி இலங்கை ரூபாவில் கிட்டத்தட்ட 45 லட்சத்துக்குமேல் சுருட்டியுள்ளாள் சுபாசினி என்ற பெயரில் உலா வந்த அழகுகலை நிலையத்தில் வேலை செய்த பெண் ஒருவர் மோசடி செயதுள்ளார்.
- Advertisement -
குறித்த லண்டன் குடும்பஸ்தரின் பாலியல் பலவீனத்தை பயன்படுத்தி அவருக்கு தன்னுடையது என கூறி வேறு யுவதி ஒருவரின் புகைப்படங்கள் வீடியோக்களை குறித்த யுவதி அனுப்பி வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
- Advertisement -
அத்துடன் அழகு கலை நிலையத்துக்கு வரும் பெண்களின் பல்வேறு வகையான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் குறித்த யுவதி இவ்வாறு பலருக்கு அனுப்பிவந்துள்ளாரா? என குறித்த பெண் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.
லண்டன் குடும்பஸ்தரின் மனைவி இலங்கை பொலிசாருக்கு கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்கின்றதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் கிறடிட் காட் மூலமாக இலங்கையில் உள்ள சுபாசினி என்ற பெண்ணுக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பாக மனைவி குடும்பஸ்தரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே மனைவியால் இலங்கை பொலிசாருக்கு ஒன்லைன் மூலமாக முறைப்பாடு கொடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் மனைவி குறித்த சுபாசினி என்ற பெயருடைய பெண்ணின் புகைப்படங்களை கணவனின் தொலைபேசியில் இருந்து எடுத்து ஊடகங்கள் சிலவற்றுக்கும் அனுப்பியுள்ளார். அதனை நாம் இங்கு தந்துள்ளோம்