காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கலைமகள் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று வீட்டுக்கு அத்திவாரம் தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
குறித்த நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக அத்திவாரத்துக்கு நிலத்தை தோண்டும் போது பொலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனை தொடர்ந்து பொலிஸார், விசேட அதிரடிப்படை குண்டு செயல் இழக்கும் பிரிவினர் வருகை தந்து குண்டை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை நீதிமன்ற உத்தரவை பெற்று அதனை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்