ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
- Advertisement -
பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
நேற்று முன்தினம் பண்டாரவளை பகுதியில், ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பயணித்த நிலையில் சந்தேக நபர் தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது