புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேங்காய் பறிப்பதற்காக சென்ற நபர் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் (19) மாலை பதிவாகியுள்ளது.
- Advertisement -
கோபாலபுரம்- நிலாவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் தற்பொழுது புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்