யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -
அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரைச் சார்ந்த குழுவினருக்கே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது