தாக்குதலுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த இரண்டு பிள்ளைகளின் தாயை, கால்களை பிடித்து இழுத்து கைகளால் உதைத்து, தூக்கிச் சென்று கொலை செய்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பயாகல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -
பயாகல, செவியர்பியாகம பிரதேசத்தில் வசித்த டபிள்யூ. எஸ். பிரியாணி என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
- Advertisement -
உயிரிழந்த பெண்ணின் மகள் தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு வந்ததாகவும், இதனையடுத்து மருமகன் மற்றுமொரு குழுவுடன் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த கும்பல் வீட்டிற்கு வந்ததும், இறந்த பெண் அவர்களுக்கு பயந்து அருகில் உள்ள வீட்டிற்கு சென்று படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டதாகவும், அங்கு வந்த நபர் ஒருவர் அவரை வெளியே இழுத்து தூக்கியதாகவும் அவரை தரையில் வைத்து அடித்தார்” என்று இறந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறினார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை முச்சக்கரவண்டியில் ஏற்றி களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் (பெப்.14) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் காவல்துறையினரைத் தவிர்த்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயாகல நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பண்டார தலைமையில் குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்