ஐரோப்பிய நாடொன்றில் பெருமளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
ஐரோப்பிய நாடுகள் ஊடாக பொருட்களை கொண்டு செல்லும் லித்துவேனியாவின் முன்னனி நிறுவனம் ஒன்று 600 ட்ரக் வண்டி சாரதிகளை இணைத்துக் கொள்வதற்கு தயாராகியுள்ளது.
- Advertisement -
அதற்கமைய, இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதாக லித்துவேனிய மென்வெஸ்டாஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் தனா ஜெனரிக்கேட் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குனவர்த்தனவிற்கும் லித்துவேனிய மென்வெஸ்டாஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் தலைமையிலான குழுவினர்க்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது