யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளம் குடும்பத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ் விபத்து சம்பவம் கடந்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது.
- Advertisement -
அன்றைய தினம் சகோதரனுடன் மோட்டார் சைக்களில் பயணம் செய்யும் போதே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இதில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சம்பவத்தில் தெல்லிப்பளை கிழக்கு, குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சஜந்தன் (வயது- 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த குடும்பஸ்தர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.