பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை சைதாப்பேட்டையில் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
- Advertisement -
இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு சுமார் 2 மணியளவில் கிருஷ்ணவேனி என்பவரின் வீட்டு கதவை தட்டிய பிரேமா,
- Advertisement -
தன்னை 4 பேர் கொண்ட கும்பல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காரில் கடத்தி வந்து, மாம்பாக்கம் பகுதியில் சாலவாக்கத்தில் வைத்து கற்பழித்து விட்டு, தப்பியோடியதாகவும் கூறி, தனக்கு உதவுமாறு கூறியிருந்தார்.
பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். பிரேமாவின் புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரேமாவை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், பரிசோதனைக்காகவும் அனுமதித்தனர்.
தொடர்ந்து, பிரேமாவைக் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணையை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தன்னை காரில் கடத்தியதாக பிரேமா கூறிய நிலையில் செங்கல்பட்டு நகரில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளில், பிரேமா இளைஞர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி செல்வது பதிவாகி இருந்தது.இதனை தொடர்ந்து பிரேமாவின் மேல் சந்தேகமடைந்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பிரேமாவுக்கும் உத்திரமேரூரை அடுத்த மலையான் குளத்தைச் சேர்ந்த சலீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.
அதே போல் நேற்றும் பிரேமாவும், சலீமும் தனிமையில் சந்திக்க மாம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருந்துள்ளனர். பின்னர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சலீமிடம் பிரேமா கேட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்ள சலீம் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சலீம், ஆத்திரத்தை பிரேமாவைத் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால், தன்னுடன் தனிமையில் இருந்து விட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த,
காதலனை சிக்க வைக்க திட்டம் தீட்டிய பிரேமா, தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்ததாக நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்துசலீம் என்பவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்