நேற்றைய தினம் கிளிநொச்சியின் பிரபல ஊடகவியலாளரான இளம் குடும்பஸ்தர் நிபோஜன் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில் திரும்ப முற்பட்ட போது நேற்றைய தினம் கொழும்பு தெகிவளைப் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இவர் ஒரு சிறந்த ஊடகவியலாளரும் வளர்ந்துவரும் யூரியூப்பரும் ஆவார். ரயில் தண்டவாளத்தின் அருகில் தனது விடியோவை எடுத்துக்கொண்டு இருக்கும் போது வேகமாக வந்த ரயில் அவரை தட்டி சென்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சற்று முன்னர் அவரது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாளைய தினம் இறுதிக்கிரிகைகள் இடம்பெறும் என கூறப்படுகின்றது.
நண்பன் நிபோஜன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்