பிரான்சில் 32 வயதான வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தரான குமார் என்பவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். விவாகரத்து பெறுவதற்காக கணவரிடமிருந்து பிரிந்து தனித்து வாழ்ந்து வந்த 27 வயதான இளம் பெண்ணாண மனைவியை தாக்கி கொள்ளையடித்த குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
மனைவியின் 35 பவுண் தாலிக் கொடி மற்றும் 50 பவுண்களுக்கு மேலான நகைகளை கணவரான குமார் மனைவியைத் தாக்கி மனைவியிடமிருந்து பறித்துச் சென்றதாக முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சொந்த இடமாகக் கொண்ட இளம் பெண் கடந்த 2018ம் ஆண்டு வவுனியாவைச் சொந்த இடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட குமார் என்பவரை பதிவுத்திருமணம் புரிந்து 2019ம் ஆண்டு பிரான்ஸ் சென்றுள்ளார்.
- Advertisement -
இவ்வாறான நிலையில் குமாருக்கு பெண்கள் பலருடன் பாலியல் தொடர்பு இருந்துள்ளதை மனைவி அறிந்து சண்டைபிடித்து வந்துள்ளார். குமார் பிரான்சில் உணவகம் ஒன்றை நடாத்தி வந்துள்ளார். அங்கு வரும் ஆபிரிக்க பெண்கள் பலருடனும் அவர் தவறான உறவில் இருந்து வந்ததை அறிந்த மனைவி குமாரை விட்டு கடந்த வருடம் பிரிந்து தனது ஒன்றுவிட்ட சகோதரனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந் நிலையிலேயே குமார் மனைவி தங்கியிருந்த வீட்டினுள் புகுந்து மனைவியை கடுமையாகத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் குமாருடன் தொடர்பில் இருந்த இலங்கை பெண்கள் மற்றும் ஆபிரிக்க பெண்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய கைத் தொலைபேசியையும் மனைவியை கட்டி வைத்து தாக்கி அதனை பெற்றுச் சென்றதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் குமாரின் லீலைகள் தொடர்பான வீடீயோ காட்சிகள் மனைவியால் ஊடகங்கள் சிலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றிலேயே குமார் கொழும்புப் பகுதியில் வசித்து வரும் சங்கீதா எனும் 35 வயதான அன்ரியுடன் நிர்வாணமாக வீடியோ செயற்பாட்டில் ஈடுபடும் காட்சிகளும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது