புத்தளம் – பாலாவி பகுதியில் உணவகமொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (25.01.2023) காலையளவில் பதிவாகியுள்ளது.
- Advertisement -
சம்பவத்தில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனைடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அயலிருந்தவர்களால் குறித்த தீப்பரவல் உடனடியாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது