பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்த முடியாது அழுத்தங்களுக்கு உள்ளான தாய் ஒருவர், 5 வயதான ஆண் பிள்ளை மற்றும் 8 வயதான பெண் பிள்ளைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் நால்ல தலாஹேன பின்கும்புரவத்த பிரதேசத்தில் நடந்துள்ளது.
- Advertisement -
நேற்று நடந்த இந்த சம்பவத்தில் விஷம் அருந்திய நிலையில் ஆபத்தான நிலைமையில் இருந்த இரண்டு பிள்ளைகள் கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாய் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
தொழில் எதனை செய்ய 31 வயதான தாய், தனது கணவனுக்கு தெரியாமல் சுமார் 3 லட்சத் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலைமையில், பெண், அன்னாசி பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்படும் மூன்று கிருமி நாசனி குப்பிகளை எடுத்து வந்து அவற்றில் இரண்டு குப்பிகளை பிள்ளைகளுக்கு பருக்கி விட்டு, தானும் அதனை அருந்தியுள்ளார்.
விஷம் கொடுக்கப்பட்ட போதிலும் ஆரம்பத்தில் பிள்ளைகளின் உடலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 5 வயதான ஆண் பிள்ளை அயல் வீட்டுக்கு சென்று தாய் வீட்டில் கீழே விழுந்து கிடப்பதாக கூறியுள்ளது.
அப்போது அங்கு சென்ற அயல் வீட்டுப்பெண்ணொருவர், பெண் விஷம் அருந்தி இருப்பதை அறிந்து, பெண்ணை உடனடியாக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
சற்று நேரத்தில் சிறுவன் தனக்கு தலைவலிப்பதாக கூறியுள்ளார். தாய் அருந்தியதை தாய் தமக்கும் வழங்கியதாக சிறுவன் கூறியுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் சீமாட்டி றிஜ்வே மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக நால்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.