ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் 20 வயதான ஜெய்ராம் நாயக் என்னும் இளைஞன் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
- Advertisement -
இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்து விட்டார். இந்நிலையில் ஜெய்ராம் நாயக்குக்கு அவரது உறவினர்கள் மற்றொரு சிறுமியுடன் திருமணம் செய்து வைக்க முயன்றனர்.
- Advertisement -
வெறுப்படைந்த ஜெயராம் கிராமத்தை விட்டே ஓடி விட்டான். அதற்குள் அந்த சிறுமி 8மாத கர்ப்பிணியானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுமி கர்ப்பமாக இருந்ததால் பள்ளியில் இருந்தும் நிறுத்தப்பட்டார். வீட்டிலேயே சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார்.
பிரசவத்தின் மூலம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 14 வயது சிறுமி தாயான சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
14 வயது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த விவகாரம் குறித்து காவல்துறையும், குழந்தைகள் நலக் குழுவும் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.