இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப் பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை. சருமத்துடன் சேரும் சில இரசாயன பொருட்களினால் உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.