அனுராதபுரம் எப்பாவல , கிராலோகம பகுதியில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர் முறைப்படி செய்துள்ளார். கிராலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனை இவ்வாறு காணாமல் போய் உள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் குழந்தையின் தாய் எப்பாவல பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். அப்பகுதியில் மின் சாதனை விற்பனையகம் ஒன்றை நடத்தும் நபர் ஒருவரே சிறுவனை கடத்தி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக சிறுவனின் தாய் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
- Advertisement -
புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு 0252249122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.