கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் எனும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் பங்கெடுத்து வருகிறார்.
- Advertisement -
இந்த நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் சீலாவதிக்கு இரண்டாம் பரிசாக $54,885 (ரூ.1,47,03,551.36) விழுந்துள்ளது.
- Advertisement -
இது தான் அவருடைய முதல் பெரிய வெற்றியாகும். இது தொடர்பில் சீலாவதி கூறுகையில், வழக்கம் போல நான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என ஸ்டோருக்கு (store) சென்று பார்த்தேன்.
அப்போது எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்கையில் ‘பிக் வின்னர்’ என பார்த்தபோது, மிகவும் உற்சாகமடைந்தேன், இதையடுத்து என் உடலே நடுங்கியது.
உடனடியாக காரில் உட்கார்ந்திருந்த என் மகனிடம் இந்த மகிழ்ச்சி தகவலை சொன்னேன். எங்கள் இருவராலும் இதை நம்ப முடியவில்லை என்றார்.
OLG பரிசு மையத்தில் பரிசுக்கான காசோலையை பெறும்போது சீலாவதி கூறுகையில், பரிசு பணத்தை வைத்து உடனடி திட்டங்கள் எதுவும் போடவில்லை, இருப்பினும் குடும்பத்தாருக்கு உதவ திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.