பெண்களின் மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை போலித் திறப்புகளைக் கொண்டு திறந்து நபர் ஒருவர் திருடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
- Advertisement -
இச் சம்பவத்தை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன் ஒருவரே செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
- Advertisement -
அதற்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு இலட்சம் ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நேற்று (09) அந் நபர் கைது செய்யயப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் வன்னியங்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பாடசாலைகள், இயற்கை பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்தே இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.